×

காரைக்காலில் 11ம்தேதி வக்பு வாரியம் ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முஸ்லீம் ஜமாஅத் செயற்குழுவில் முடிவு

காரைக்கால், அக்.2: புதுச்சேரியில் வக்பு வாரியம் மற்றும் ஹஜ் கமிட்டி அமைக்க வலியுறுத்தி, காரைக்காலில் வரும் 11ம் தேதி கவன ஈப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முஸ்லீம் ஜமாஅத் செயற்குழுவில் முடிவு செய்துள்ளது.காரைக்கால் நகர முத்தவல்லிகள், அனைத்து பள்ளி ஜமாஅத்தார்கள், ஆலிம்கள், சமுதாய அமைப்புகள், இஸ்லாமிய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய, காரைக்கால் முஸ்லீம் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம், காரைக்கால் தனியார் இடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் அபுல் அமீன் வரவேற்றார்.கூட்ட முடிவில், புதுச்சேரி ஹஜ் கமிட்டிக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்காத காரணத்தால், பல்வேறு சலுகைகளை பெறம்டியாமல் போகிறது. எனவே ஹஜ்கமிட்டியை உடனே அமைக்கவேண்டும். ஒருவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு அவரது தந்தையின் ஜாதி சான்றிதழின் அடிப்படையில் அதே ஜாதியை காண்பித்து ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கணவனால் கைவிடப்பட்டவர், கணவர் எங்கிருக்கிறார் என்பதையே தெரியாதவர், கணவரை விட்டு பிரிந்தவர், கணவர் இறந்து பல வருடங்கள் கடந்தவர் என்ற நிலையில் உள்ள பெண்மணியின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கோரும்போது அந்த பெண்மணியின் கணவரின் ஜாதிக்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்க முடியும் என தாலுகா அலுவலகத்தில் கூறி அந்த சிறுவர்களையும், அந்த பெண்மணிகளையும் அலைக்கழித்து வருகின்றனர். ஆகவே, இதுபோல் கணவரை இழந்து குழந்தைகளை வளர்த்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கும் பெண்களின் ஜாதி சான்றிதழ் அடிப்படையில் அந்த குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி காரைக்காலில் கவன ஈர்ப்பு ஆர்பபட்டம் நடத்தப்பம் உள்ளிட்ட தீர்மானம் இயற்றப்பட்டது. முடிவில் மக்கள் தொடர்பாளர் சமீர் அஹமது அல்பாசி நன்றி கூறினார்.



Tags : Jama'at Working Committee ,Haj Committee ,Wakfu Board ,Karaikal ,
× RELATED தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவராக அப்துல்சமத் எம்எல்ஏ தேர்வு